சமணசமயம் சிறப்படைந்த வரலாறு சமணமும் தமிழும் – 7 அறிஞர் சீனி. வெங்கடசாமி பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில்… Continue reading சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?
Tag: சமணர்
சமணரின் இல்லற ஒழுக்கம்!
சமணமும் தமிழும் : பகுதி-5 அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி ஆருகதரின் இல்லற ஒழுக்கம் ‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’ என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார்… Continue reading சமணரின் இல்லற ஒழுக்கம்!
சமணர்களின் கடுமையான துறவறம்!
சமணமும் தமிழும் – 4 அறிஞர் சீனி. வெங்கடசாமி சமணமுனிவர் ஒழுக்கம் வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின்,… Continue reading சமணர்களின் கடுமையான துறவறம்!
சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் இல்லை!
சமணமும் தமிழும் – 3 அறிஞர் சீனி. வெங்கடசாமி சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை. சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்; ‘உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும் செயிர்தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற… Continue reading சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் இல்லை!
சமணசமயம் தோன்றிய வரலாறு
சமணமும் தமிழும் - 2 அறிஞர் சீனி. வெங்கடசாமி சமணசமயம் தோன்றிய வரலாறு சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன. சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும்… Continue reading சமணசமயம் தோன்றிய வரலாறு