அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து குறித்து சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், திரு.அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி… Continue reading ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை
Tag: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சிறையிலிருந்து இன்று விடுதலையாகிறார் ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலிருந்து இன்று விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அதற்கான நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். அதனால் ஜெயலலிதாவை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய இயலவில்லை என வழக்கறிஞர் குமார் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் நகல் மூலம் ஜெயலலிதாவை, சிறையில் இருந்து விடுவிப்பதற்காக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் முடிந்து அவர் இன்று… Continue reading சிறையிலிருந்து இன்று விடுதலையாகிறார் ஜெயலலிதா
முதலைச்சரை மாலை வரை காக்க வைத்த ஜெயலலிதா!
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க இயலாததால், முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தமிழகம் திரும்பினார்.முதலமைச்சராக திங்கட்கிழமையன்று பொறுப்பேற்றுக்கொண்ட பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை சந்திக்க உடனடியாக பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அவருடன், அமைச்சர்கள் சிலரும் சென்றிருந்தனர். நேற்று காலை ஜெயலலிதாவை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், மாலை வரை அவர் சந்திக்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். ஜெயலலிதாவை சந்திக்க தமிழக முதலமைச்சருக்கு தாங்கள் அனுமதி… Continue reading முதலைச்சரை மாலை வரை காக்க வைத்த ஜெயலலிதா!