கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் லதாமணி ராஜ்குமார்…
தேவையான பொருட்கள்:
மண் தொட்டி – 1
டெக்சர் ஒயிட்
ஃபேப்ரிக் கலர் – பிரவுன்
கண்ணாடி துண்டுகள் – வட்டம்
, டைமண்ட்
வடிவில்
பிளாஸ்டிக் ஷீட்
கத்தரிக்கோல்
பிரஷ்
வீடியோவில் செய்முறையைக் காணலாம்…
எப்படி செய்வது?
மண் தொட்டியை துணியால் துடைத்து வையுங்கள். மண் தொட்டியில் சொரசொரப்பை நீக்க, சாண்ட் பேப்பரை வைத்து தேய்த்தும் பெயிண்ட் செய்யலாம்.
அடுத்து, பிரவுன் நிற ஃபேப்ரிக் பெயிண்டை மண் தொட்டியின் அடிப்பாகம், உள்பாகம் நீங்க, வெளிப்பக்கம் முழுக்க பூசுங்கள்.
ஃபேப்ரிக் பெயிண்ட் நீரால் அழியாது, நச்சுத்தன்மை இல்லாததும்கூட. எனவே, செடிகளை எந்தவிதத்திலும் இது பாதிக்காது. இந்தத் தொட்டிகளில் நட்டு வளர்க்கும் செடிகளை அழகுக்காக வீட்டினுள் வைத்தாலும் பாதிப்பு ஏதுவும் ஏற்படாது.
பெயிண்ட் செய்த தொட்டியில் தேவையான இடத்தில் ஆங்காங்கே வட்ட, டைமண்ட் வடிவ கண்ணாடி துண்டுகளை ஒட்டுங்கள்.
பிளாஸ்டிக் ஷீட்டை கோன்போல செய்துகொண்டு, அதில் டெக்சர் ஒயிட்டை ஊற்றி மேல்பக்கமாக இறுக்கமாக முடிச்சிடுங்கள். கோனின் கூரான முனையை லேசாக கத்தரித்து, ஒட்டியிருக்கும் கண்ணாடி துண்டுகளைச் சுற்றி படத்தில் காட்டியதுபோல எளிமையான டிசைன்களை போடுங்கள்.
கோலம் போன்ற டிசைன்களை வரையலாம், எடுப்பாகத் தெரியும்.
மண் தொட்டியின் நடுவிலும் கீழேயும் மேலேயும் டிசைன்களைப் போடலாம்.
உலரவிட்டு, மண் நிரப்பி சின்ன செடிகளை நட்டு, வீட்டின் வரவேற்பறை அலங்கரிக்கலாம்!