டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 64 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த முறை, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளதற்காக டெல்லி மக்களுக்கு நன்றி சொன்ன அரவிந்த கெஜ்ரிவால், அதை காப்பாற்றுவோம் என்று பேசினார். டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்!” இல் ஒரு கருத்து உள்ளது