நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்குச் சென்று பீர் வாங்குவதாக காட்சித் தொகுப்பொன்று இணைய தளங்களில் வெளியாகி்யள்ளது. இணையத்தில் இப்போதைய பேசுபொருளாக இருக்கும் இந்த விடியோ நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளதாகவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்னை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.
பெண்களை மது குடிக்கத் தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்து போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.
எனவே பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்க கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லா விட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்’ என்று அறிவித்துள்ளார்.