நோபல் விருது 2014
2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தானின் மலாலாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் வசித்து வரும் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி, 1990 முதல் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது சேவையின் மூலம் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை துவக்கி கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வருகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, கல்விக்காக போராடி வருபவர்.