சென்னையை அடுத்த ஆவடி அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் அட்டை கிடங்கு உள்ளது.இந்த குடோனில் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட பலர் தங்கி பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அமர் (23), ராஜ் (22), திருச்செந்தூரைச் சேர்ந்த ரகு (26) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரத்குமார் (26) என அடையாளம் காணப்பட்டனர். தீவிபத்து குறித்து அறிந்து, 15 தீயணைப்பு வாகனங்களில் வந்து மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக திருவேற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.