தேவையானவை:
பாசிப்பருப்பு – கால் கப்
முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – ஒரு துண்டு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 6 பல்
அரைக்க:
பச்சை மிளகாய் – 4
தாளிக்க:
பட்டை – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்வது எப்படி?
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். வெந்த பாசிப்பருப்புடன் இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து, விடாமல் கிளறி வேகவையுங்கள். வெங்காயம் நன்கு வெந்தததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து தாளித்து கொட்டி இறக்குங்கள். இறக்கிய குழம்பில் எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேருங்கள்.
இட்லி, இடியாப்பம், சாதம் என அனைத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.