இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணுமின் திட்டபணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடங்குளத்தில் முதல்அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டதாகவும் இரண்டாவது அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை விரைவில் எட்டும் என்றும் தெரிவித்தார். மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் அமைக்கப்படும் அணு மின் நிலையங்கள் சர்வதேச தரத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கல்பாக்கத்தில் அதிவேக அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும்,ஹைதராபாத்தில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர் பாசு தெரிவித்தார்.