சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: இலக்கியத்தில் பட்டமேற்படிப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை.
பணித் தகுதி: குறைந்தது 5 ஆண்டுகள் இலக்கியத்தில் செம்மைபடுத்தும் அனுபவம்(எடிட்டிங்) இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும் அவசியம்.
கூடுதல் தகுதி: இலக்கிய ஆய்வு பட்டம் பெற்றவர்கள், இலக்கிய பரிட்சையம் உள்ளவர்கள், பத்திரிகை துறை டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இடஒதுக்கீடு: பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
ஊதியம்: ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ. 39 ஆயிரம் வரை
விண்ணங்கள் அனுப்ப இறுதி நாள்: திருத்தமாக எழுதப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் அனுப்பும் விண்ணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
அனுப்ப வேண்டிய முகவரி:
சென்னை அலுவலக உதவி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் என்று தலைப்பிட்டு
செயலாளர், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35 ஃபெரோஸ்ஷா சாலை, புது டெல்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சாகித்ய அகடமி இணைய தளத்தை பார்க்கவும்.
சிறந்த பகிர்வு