மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, குறும்படங்களில் நடித்து, கேரக்டர் ரோல்களில் சினிமாவில் தோன்றி இப்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மாநிறமான நடிகைகள் இந்திய சினிமாக்களின் ஜீவிப்பது அரிதாக நிகழக்கூடிய ஒன்று. ஐஸ்வர்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் நன்றாக பேச வரும். அதனால் இயல்பான நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்கிறார். அட்டக்கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அமுதா என்கிற கதாபாத்திரத்தை நினைவு வைத்திருக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தார். ரம்மி, பண்ணையாரும் பதிமினியும் படங்களில் கதாநாயகியாக வந்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் சேர்ந்திருக்கிறார். இந்தப் படங்களில் அந்தந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்கேற்ப இயல்பாக வந்திருந்தார் ஐஸ்வர்யா. எக்ஸ்பிரசிவ்வான கண்கள் இவருக்கு.
தொடர்ந்து திருடன் போலீஸ், காக்கா முட்டை , இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்தப் படங்கள் தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா.