தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் புதியதாக மருத்துவ படிப்பில் சேரும் மாணவ, மாணவிகள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட் அணியக்கூடாது. பேண்ட், முழுக்கை சட்டையும், ஷூவும் அணிய வேண்டும். மாணவிகள் புடவை, சுரிதார் தவிர வேறு உடைகள் அணியக் கூடாது. தலை முடியை விரித்து போடக்கூடாது. இதனை பின்பற்றாத மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆடை கட்டுப்பாடு குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.